/* */

இந்த ஆண்டு முழுவதும் பெரியாறு நீர் மட்டம் 142 அடியை எட்டவில்லை

பெரியாறு நீர் மட்டம் 2023ம் ஆண்டு முழுவதும் உச்சநீதிமன்றம் அனுமதித்த கொள்ளவான 142 அடியை எட்டவேயில்லை.

HIGHLIGHTS

இந்த ஆண்டு முழுவதும் பெரியாறு  நீர் மட்டம் 142 அடியை  எட்டவில்லை
X

பைல் படம்

முல்லைப்பெரியாறு அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 152 அடியாகும். ஆனால் கேரள அரசு அணை பலகீனமாக உள்ளதாக கூறி வீண் வதந்திகளை கிளப்பி அணையின் நீர் மட்டத்தை குறைத்தது. தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடுத்து, மத்திய நீர் வளத்துறையின் பல்வேறு நிபுணர்குழுக்களின் ஆய்வுகளின் கீழ் அணை நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள அனுமதித்தது.

ஆனால் கேரள அரசு பெரியாறு நீர் பிடிப்பு வனப்பகுதியில், பல்வேறு தடுப்பணைகள், சிற்றணைகளை கட்டி அணைக்கு வரும் நீரின் பெரும் பங்கினை கேரளாவிற்குள் திருப்பி விட்டுள்ளது. இதனால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க ரூல்கர்வ் முறையினையும் கொண்டு வந்தது. இத்தனை தடைகளையும் தாண்டி பெரியாறு நீர் மட்டம் அவ்வப்போது 142 அடியை தொட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு கடந்த வாரம் அணை நீர்மட்டம் 141.25 அடி வரை உயர்ந்தது. எப்படியும் 142ஐ தொட்டு விடும் என தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட மக்கள் கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்தனர்.

அதற்குள் மழையளவு குறைந்து நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் அணை நீர் மட்டம் சரியத்தொடங்கி விட்டது. இன்று அதாவது டிசம்பர் 30ம் தேதி அன்று காலை நிலவரப்படி அணை நீர் மட்டம் 138.85 அடியாக இருந்தது. இந்த ஆண்டு கடந்து புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இனிமேல் மழை பெய்து நீர் மட்டம் 142 அடியை எட்ட வாய்ப்புகள் இல்லை. எனவே கடைசி வரை 142 அடியை நீர் மட்டம் எட்டி விடும் என்ற விவசாயிகளின் நம்பிக்கை பொய்த்துப்போனது.

Updated On: 30 Dec 2023 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  2. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  4. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  5. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  6. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  10. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்