/* */

போடி அருகே வெள்ளத்தில் சிக்கிய மின் வாரிய தற்காலிக ஊழியர் உடல் மீட்பு

போடி அருகே மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மின்வாரிய தற்காலிக ஊழியர் உடல் 30 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

போடி அருகே வெள்ளத்தில் சிக்கிய மின் வாரிய தற்காலிக ஊழியர்   உடல் மீட்பு
X

தேனி சுக்குவாடன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27) இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்தார். இரண்டு நாட்களுக்கு முன், தனது நண்பர்கள் பாண்டியராஜன், (26,) குமரேசன், (32,) கோகுல், (27) ஆகியோருடன் சேர்ந்து போடி அருகே ஊத்தாம்பாறை ஆற்றுப்பகுதியில் குளிக்க சென்றார். இவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் பெய்த மழையால் திடீரென காட்டாற்று வெள்ளம் வந்தது. இந்த வெள்ள நீரில் சுரேஷ் அடித்துச் செல்லப்பட்டார். மற்றவர்களும் சிக்கிக் கொண்டனர்.

போடி தீயணைப்பு படையினர் வெள்ள நீரில் சிக்கிய பாண்டியராஜன், கோகுல், குமரேசன் ஆகியோரை உடனடியாக மீட்டனர். சுரேஷ் உடலை தேடி வந்தனர். வெள்ளநீர் வடிந்த பின்னர் (அதாவது 30 மணி நேரத்திற்கு பின்னர்) சுரேஷ் உடல், அவர் வெள்ளத்தில் சிக்கிய இடத்தில் இருந்து நுாறு மீட்டர் தொலைவில் ஒரு ஓரத்தில் கிடந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. குரங்கனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Jun 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?