/* */

வீரபாண்டி திருவிழாவால் கீரை விற்பனை மந்தம்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா காரணமாக கீரை விற்பனை மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வீரபாண்டி திருவிழாவால் கீரை விற்பனை மந்தம்
X

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா நாளை தொடங்குகிறது. ஒரு வாரம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக கடந்த 21 நாட்களுக்கு முன்னர் கம்பம் நடவு செய்யப்பட்டது. அப்போது முதல் (சிலர் சித்திரை முதல் தேதி முதல்) தேனி மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

விரத காலங்களில் வேப்பங்காய் கசப்பு தவிர வேறு எந்த வகையிலும் கசப்பு பொருட்களை உணவுக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக கீரை வகைகளை (சில மட்டுமே கசப்பு) தவிர்த்து விடுவார்கள். இதனால் ஒரு மாதமாக கீரை விற்பனை படு மந்தமாக உள்ளது.

தேனி உழவர்சந்தையில் ஒரு கீரை கட்டின் விலை 10 ரூபாய் தான். இதனால் எப்போதும் கீரைகள் தான் முதலில் விற்று தீரும். ஆனால் மக்கள் தவிர்க்க தொடங்கியது முதல் கீரை விற்பனை டல்லடித்து வருகிறது. வரும் மே 17ம் தேதி கவுமாரியம்மன் திருவிழா நிறைவடைகிறது. மே 18ல் ஊர்பொங்கல் நடைபெறும். அதன் பின்னரே மக்கள் கீரைகளை மீண்டும் பயன்படுத்துவார்கள் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 9 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு