/* */

மூதாட்டியிடம் நகையை பறித்த வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

உத்தமபாளையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்துதப்பி ஓடிய இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மூதாட்டியிடம் நகையை பறித்த  வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
X

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்த 67 வயதுடைய மூதாட்டியான சாந்தா என்பவரிடம் குளிர்பானம் வாங்குவது போல நடித்து ஏமாற்றி சாந்தா அணிந்திருந்த 36 கிராம் மதிப்புள்ள 41/2 பவுன் தங்க நகையை இரண்டு நபர்கள் பறித்துக்கொண்டு ஓடி விட்டார்கள்.

இது தொடர்பாக உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து சென்னையைச் சேர்ந்த லோகநாதன் மதுரையைச் சேர்ந்த பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல இடங்களில் திருட்டு வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இரண்டு குற்றவாளிகளையும் உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Updated On: 24 July 2022 1:01 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...