/* */

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு

ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு
X

பைல் படம்.

ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெரியகுளம் பழைய சந்தை ரோட்டை சேர்ந்தவர் ராமாயியம்மாள் 62. இவர் கல்வித்தறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் வத்தலக்குண்டு வட்டார கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காமராஜ்நகரை சேர்ந்த செல்வத்தின் மகன் ராஜா, மருமகள் சோனியாகாந்திக்கு ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி 23 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர். வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திரும்பத்தரவில்லை. இது குறித்து செல்வம் கொடுத்த புகாரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராமாயியம்மாள், மாரியம்மாள் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 3 Jun 2022 4:21 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...