/* */

ஓ.பி.எஸ்., தம்பி ராஜா மீது ரூ.1.50 கோடி மோசடி புகார்

ரூ.1.50 கோடி மதிப்புள்ள சொத்தை மோசடி செய்து அபகரிக்க முயற்சிப்பதாக நிலத்தின் உரிமையாளர் ஓ.பி.எஸ்., தம்பி ராஜா மீது தேனி எஸ்.பி.,யிடம் புகார் செய்துள்ளார்.

HIGHLIGHTS

ஓ.பி.எஸ்., தம்பி ராஜா மீது ரூ.1.50 கோடி மோசடி புகார்
X

ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டி ஜெயந்திநகரை சேர்ந்தவர் முனியாண்டி,(59).

இவர் தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரேவிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், கொடைக்கானல் வில்பட்டியில் என் மனைவி சந்தானலட்சுமி, (54) பெயரில் ஒரு ஏக்கர் 83 சென்ட் நிலம் உள்ளது. என் மகளின் திருமண செலவிற்காக இந்த சொத்தை விற்க ஏற்பாடு செய்தோம்.

இதற்காக கடந்த 2010ம் ஆண்டு பெரியகுளம் நகராட்சி முன்னாள் தலைவரான ஓ.ராஜாவை (ஓ.பி.எஸ்.,சின் உடன் பிறந்த தம்பி), தென்கரையை சேர்ந்த அவரின் உறவினர் கிருஷ்ணன் மூலம் தொடர்பு கொண்டேன். அப்போது அந்த நிலத்தின் மதிப்பு 40 லட்சம் ரூபாய். இதனை வழங்குவதாக ராஜா உறுதி அளித்தார்.

இதனால் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி ராஜாவிற்கு எங்கள் நிலத்தை ஜெனரல் பவர் ஆப் அத்தாரிட்டி எழுதிக் கொடுத்தோம். மூன்று மாதங்களில் 40 லட்சம் தருவதாக கூறிய ராஜா பணத்தை தரவில்லை. (இப்போது அந்த சொத்தின் மதிப்பு ஒண்ணரை கோடி ரூபாய்). இதற்கிடையில் எங்கள் அனுமதியின்றி இடத்தை வேறு நபருக்கு விற்க முயற்சித்தனர்.

இதனால் ஜெனரல் பவர் ஆப் அத்தாரிட்டியை ரத்து செய்ய முயன்றோம். இதனால் ராஜா எங்களை மிரட்டினார். இது குறித்து 2011ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பின்பு 2011ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி தென்கரையை சேர்ந்த விஜயகுமாருக்கு விற்க முயற்சித்துள்ளனர்.

விஜயகுமார் சொத்தின் உரிமையாளர் கையெழுத்து இல்லாமல் வாங்க மறுத்துள்ளனர். இதனால் ராஜாவும், கிருஷ்ணனும் கையெழுத்து போடும்படி எங்களை நிர்பந்திக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Updated On: 22 July 2022 5:11 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்