/* */

ஆண்டிபட்டி அருகே மழைநீரை கண்மாயில் சேகரிக்கும் பணி: இளைஞர்கள் மும்முரம்

ஆண்டிபட்டி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரை கண்மாய்களில் சேகரிக்கும் பணியில் இளைஞர்கள் சிலர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆண்டிபட்டி அருகே மழைநீரை கண்மாயில் சேகரிக்கும் பணி: இளைஞர்கள் மும்முரம்
X

மழைநீரை கண்மாய்களில் சேகரிக்கும் பணியில் ஆசாரிபட்டி கிராம இளைஞர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் கோயில் மலையில் பெய்யும் மழைநீரை இப்பகுதி கண்மாய்களில் தேக்க கால்வாய்களை இளைஞர்கள் சிலர் சீரமைத்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி தாலுகாவில் ஆண்டிபட்டியில் இருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். இப்பகுதியில் பெரும் அளவில் மழை பெய்து வருகிறது. இந்த மழைநீர் கண்மாய்களுக்கு செல்லும் ஓடை புதர்மண்டி காணப்படுகிறது.

இதனால் மழைநீர் வீணடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆண்டிபட்டி ஆசாரிபட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாலமுருகன், கலையரசு, பொன்னுசாமி, தங்கதுரை, ராஜாராம், ராம்குமார், சின்னராஜா உட்பட சிலர் இணைந்து புதர்களை அகற்றி கண்மாய்களில் நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் செயல்பாட்டிற்கு விவசாயிகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 7 Dec 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  2. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  3. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  4. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  5. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  6. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  7. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  8. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  9. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  10. காஞ்சிபுரம்
    இருசக்கர வாகனத் திருட்டு: ஆட்டோ டிரைவர் கைது