தேனி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை தொடர்ந்தது

தேனி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை தொடர்ந்தது
X

 மழை ( கோப்பு படம் )

தேனி மாவட்டத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பின்னர், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் மீண்டும் மாவட்டத்தில் மழை பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 10.4 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 5.4 மி.மீ., போடியில் 4.8 மி.மீ., கூடலுாரில் 4.8 மி.மீ., மஞ்சளாறு அணையில் 42 மி.மீ., பெரியகுளத்தில் 28 மி.மீ., பெரியாறு அணையில் 2.4 மி.மீ., தேக்கடியில் 7 மி.மீ., சோத்துப்பாறையில் 8 மி.மீ., உத்தமபாளையத்தில் 2.2 மி.மீ., வைகை அணையில் 12.8 மி.மீ., வீரபாண்டியில் 7.4 மி.மீ., மழை பதிவானது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஈரப்பதம் நிறைந்த குளிர்காற்று வீசுகிறது.

Tags

Next Story
ai in future agriculture