வருஷநாட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இந்து அமைப்பினர் 53 பேர் கைது

வருஷநாட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இந்து அமைப்பினர் 53 பேர் கைது
X

வருஷநாட்டில்,  அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் வருஷநாட்டில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்பினர் 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம், கம்பம் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் ரவிக்குமாரை தாக்கிய வழக்கில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மீதம் இரண்டு பேரை கைது செய்ய வேண்டும் என, இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தங்களது கோரிக்கையை வலியறுத்தி, வருஷநாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டனர். போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். எனினும், தடையை மீறி, இன்று மாலை திடீரென பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 53 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ai as the future