/* */

ஆபாசமாக பேசிய உளவுத்துறை காவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு

ஆபாசமாக பேசிய உளவுத்துறை போலீஸ்காரர் மீது கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஆபாசமாக பேசிய உளவுத்துறை காவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு
X

பைல் படம்.

கூடலுார், குமுளி பகுதிக்கான தேனி மாவட்ட உளவுப்பிரிவு போலீசாக பணியாற்றுபவர் ராஜன். இவருக்கும், கூடலுாரை சேர்ந்த ஒருவருக்கும் தகராறு இருந்துள்ளது. இதனால் டென்சன் ஆன ராஜன், அந்த நபரை மொபைலில் அழைத்து மிக, மிக அறுவெறுக்கத்தக்க, கொடூர ஆபாசங்கள் நிறைந்த வார்த்தைகளால் திட்டி அவமதித்துள்ளார். அவரிடம் சண்டையும் போட்டுள்ளார்.

அந்த நபர் இந்த ஆடியோவை அப்படியே சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு, போலீஸ் எஸ்.பி.,யிடமும் புகார் செய்து விட்டார். இந்த ஆடியோவை கேட்ட பொதுமக்கள் மிகவும் கோபமடைந்தனர். ஒரு போலீஸ்காரர் அதுவும் பொறுப்பு மிக்க உளவுத்துறையில் பணிபுரிபவர் இப்படி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதை ஏற்க முடியாது. போலீசாக இருப்பதால் தனது சொந்த பிரச்னைகளுக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் தவறு என கருத்து தெரிவித்ததனர்.

இதனைத் தொடர்ந்து கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என இன்ஸ்பெக்டர் லாவண்யா தெரிவித்தார்.

Updated On: 8 April 2022 11:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  5. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  6. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  7. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  8. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  9. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!