/* */

பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்: ஓ.பி.எஸ் வடம் பிடித்தார்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்: ஓ.பி.எஸ் வடம் பிடித்தார்
X

தேனி மாவட்டம் பெரியகுளம் வராகநதியின் தென்கரையில் பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 19ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ஆம் நாள் திருவிழாவான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருத்தேருக்கு எழுந்தருளினார்.

அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அருள்மிகு சோமாஷ்கந்தரும் சிறிய தேரில் அருள்மிகு பாலசுப்பிரமணியன் வள்ளி தெய்வானையுடனும் சுவாமிகள் எழுந்தருளினர். திருத்தேர் தேரடி திடலை விட்டு கிளம்பி கச்சேரி ரோடு, கீழரதவீதி, தெற்குரதவீதி, வழியாக நகர்வலம் வந்து நிலையடைந்தது.

இந்த தேரோட்டத்தை தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்

Updated On: 26 March 2021 6:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது