/* */

பெரியகுளம் நகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா - நகராட்சி அலுவலகம் மூடல்

நகராட்சி பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பெரியகுளம் நகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா -  நகராட்சி அலுவலகம் மூடல்
X

கொரோனா ( மாதிரி படம்)

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் ஆணையாளர், பொறியாளர், உதவி பொறியாளர், மேலாளர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என 100 க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில் நகராட்சி பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

இது குறித்து பெரியகுளம் நகராட்சி ஊழியர்களிடம் விசாரித்தபோது, நகராட்சி பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பெரியகுளம் நகராட்சி அலுவலகம் மூடப்படுகிறது. திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

பொதுமக்கள் யாரும் அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டாம். பொதுமக்கள் தங்களது புகாரை நகராட்சி தபால் பெட்டி அல்லது அஞ்சலகம் மூலம் அனுப்பி தீர்வு காணலாம் என்றார். மேலும் தற்சமயம் கொரோனா காலமென்பதால் அத்தியாவசிய பணிகளுக்கான அலுவலக பணியாளர்கள் மட்டும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 May 2021 3:52 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!