மக்கள் எழுச்சியுடன் அதிமுக மகத்தான வெற்றி பெறும் - தேனி எம்.பி - ஓ.பி.ஆர்

X
By - Reporter - THENI |6 April 2021 2:00 PM IST
சட்டமன்ற தேர்தலில் மகத்தான எழுச்சி இருப்பதால் அதிமுக விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் வாக்களித்த பின்னர் தேனி எம்.பி.ஓ.ரவீந்திரநாத் தெரிவித்தார்.
அதிமுக மக்களவைத் தலைவரும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் இன்று தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.
பெரியகுளம் தென்கரையில் உள்ள செவெனத்டே அட்வென்டிஸ்ட் பள்ளியில் வாக்களித்தார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லும் முன் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை, கிருமி நாசினியில் மூலம் கைகளை சுத்தம் செய்தும், கையுறை வழங்கப்பட்டது.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.ரவீந்திரநாத், சட்டமன்ற தேர்தலில் மகத்தான எழுச்சி இருப்பதால் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu