/* */

அடிப்படை வசதிகள் கோரி போராட்டம்

பெரியகுளம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அலுவலகத்திற்கு பொதுமக்கள் பூட்டு போடும் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அடிப்படை வசதிகள் கோரி போராட்டம்
X

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தேவதானப்பட்டி பேரூராட்சி. இப்பேரூராட்சிக்கு உட்பட்ட 14, 15, 16 மற்றும் கக்கன்ஜி காலணி ஆகிய பகுதிகளில் வடிகால், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, அப்பகுதியினர் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் தற்போது வரை செய்து தரப்படவில்லை.

இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளின் நீண்ட கால கோரிக்கைகளை செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று அப்பகுதி மக்கள் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்றனர்.

தேவதானப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து பூட்டு சங்கிலியுடன் ஊர்வலமாக சென்ற பொதுமக்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின் அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்றவர்களிடம் பெரியகுளம் வட்டாட்சியர் ரத்னமாலா, பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 2 Feb 2021 6:07 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  8. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  10. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?