கொடுவிலார்பட்டி ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

கொடுவிலார்பட்டி ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்
X
தேனி அருகே கொடுவிலார்பட்டி கிராம ஊராட்சி செயலாளர் ரகுநாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கலெக்டர் முரளீதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டட அனுமதி வழங்கியது, வரிவசூல் செய்தது, ஊராட்சி செலவின கணக்குகள் எதுவும் முறையாக பதிவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படாதது கண்டறியப்பட்டது.

இந்த கணக்குகளில் முறைகேடுகள் நடந்ததையும் கலெக்டர் விசாரணையின் போது கண்டறிந்தார். இதனால் ஊராட்சி செயலாளர் ரகுனாத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags

Next Story
ai in future agriculture