/* */

மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

மதுரை கூட்டு்க்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், கூடலுார் லோயர்கேம்ப்பில் முல்லைப்பெரியாற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து அங்கிருந்து குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல 1300 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடக்கிறது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தேனி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும். தவிர திட்டம் தொடங்கும் இடத்தில் நுாறு ஆண்டுகளுக்கு மேல் சலவைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தும் சலவை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கூட்டுக்குடிநீர் திட்டத்தை வைகை அணையில் இருந்து செயல்படுத்த வேண்டும் என சலவைத்தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையினை வலியுறுத்தி ஏற்கனவே முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத்தினரும், பாரதீய கிஷான் விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து இன்று கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் மதுரை குடிநீர் திட்டத்தை மாற்று வழிகளில் செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர். தங்கள் சமூகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சலவை தொழிலாளர்களும் கலெக்டரிடம் கொடுத்தனர்.

Updated On: 16 May 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு