/* */

வீரபாண்டி அருகே கோர விபத்து ஒருவர் பலி: ஐந்து பேர் பலத்த காயம்

தேனியை அடுத்த வீரபாண்டியில் தனியார் ஆம்னி பஸ்சும், சரக்கு வேனும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர்.

HIGHLIGHTS

வீரபாண்டி அருகே கோர விபத்து  ஒருவர் பலி: ஐந்து பேர் பலத்த காயம்
X
தேனி அருகே வீரபாண்டியில் சரக்கு வேனும், ஆம்னி பஸ்சும் மோதிக்கொண்ட இடத்தில் மீட்பு பணி நடக்கிறது.

தேனி மாவட்டம், வீரபாண்டியை அடுத்த உப்பார்பட்டி விலக்கில் இன்று காலை சென்னையில் இருந்து கம்பம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ்சும், தேனி நோக்கி வந்த மினி சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் ஆம்னி பஸ் ஓட்டுனரான அனுமந்தன்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். சரக்கு வேன் டிரைவர் விக்னேஷ், மிகவும் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சரக்கு வேனில் வந்த மதன், ஹர்வின், மற்றும் பஸ்சில் வந்த பிரேம்குமார்,, உமாசங்கர், ஆகியோரும் பலத்த காயமடைந்து தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வீரபாண்டி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Aug 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?