கூடலூரில் அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு

கூடலூரில் அரசு பஸ் மீது  கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு
X
கூடலூர் அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் கார் டிரைவர் நவநீதகிருஷ்ணன் (வயது35.) இவர் தனது காரில் கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பாச்சி பண்ணை அருகே சென்ற போது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த நவநீதகிருஷ்ணன், மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டு இறந்தார். கூடலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
highest paying ai jobs