Begin typing your search above and press return to search.
போடி மெட்டு மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து நிறுத்தம்
போடி- மூணாறு வழித்தடத்தில் போடி மெட்டு மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தேனி மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழையால் போடி மெட்டு மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
போடி- மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடி மெட்டு மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மண் சரிவும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதனால் போடி மெட்டு மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் மழை குறையும் வரை போடி மெட்டு மலைப்பாதையில் மூணாறு பகுதிக்கு இரவு நேர போக்குவரத்தை நிறுத்தி வைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
நேற்று முழுவதும் இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.