/* */

முல்லைப்பெரியாறு அணைக்கு அனுமதியின்றி சென்றவர்கள் மீது வழக்கு

முல்லைப்பெரியாறு அணைக்கு அனுமதியி்ன்றி சென்று வந்த கேரள, டெல்லி போலீஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

முல்லைப்பெரியாறு அணைக்கு  அனுமதியின்றி சென்றவர்கள் மீது வழக்கு
X

முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.

முல்லைப்பெரியாறு அணை கவனமாக பாதுகாக்கப்படும் பகுதி என்பது தெரிந்தும், கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,க்கள் இரண்டு பேர், டெல்லியை சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் அவரது மகன் ஆகிய 4 பேர் அனுமதியின்றி பெரியாறு அணைக்கு சென்று, பகல் முழுவதும் தங்கியிருந்து விட்டு வந்துள்ளனர். இவர்களை தமிழக அரசுக்கு சொந்தமான படகில், ஓட்டுனர் முரளி என்பவர் அழைத்துச் சென்றுள்ளனார்.

படகு ஓட்டுனர் முரளி கேரளாவை சேர்ந்தவர். தனியார் டூரிசம் நடத்துகிறார். சுற்றுலா பயணிகளை தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியில் தங்க வைப்பார். இவர் மீது பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அப்படியிருந்தும் முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கான கேரள டி.எஸ்.பி., நந்தன்பிள்ளை அணைக்கு சென்று வந்த 4 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளார். அவர்களை அழைத்துச் சென்ற முரளி மீது வழக்கு பதிவு செய்யவில்லை.

எனவே, குமுளி தமிழக போலீசார் முரளி மீது வழக்குப்பதிவு செய்து, அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். அணைப்பகுதிக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். இதே நிலை நீடித்தால் அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என, தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 17 March 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு