/* */

முல்லை பெரியாறு அணையில் 152 அடி: கூடலூரில் பொங்கல் வைத்து போராட்டம்

முல்லை பெரியாறு அணையில், 152 அடி நீர் தேக்க வலியறுத்தி, கூடலூரில் விவசாயிகள் பொங்கல் வைத்து போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணையில் 152 அடி:  கூடலூரில் பொங்கல் வைத்து போராட்டம்
X

கூடலுாரில் விவசாயிகள் பொங்கல் வைத்து போராட்டம் நடத்தினர்.

முல்லை பெரியாறு அணையில், நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும், 1300 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் மதுரை குடிநீர் திட்டத்திற்கு லோயர் கேம்ப்பில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்வதை நிறுத்தி, கால்வாய்கள் மூலம் குடிநீர் கொண்டு சென்று நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகைகளை வலியுறுத்தி, கூடலூரில் வரும் இன்று விவசாயிகள் 152 பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் அடுப்பு, விறகு, பொங்கல் வைக்க தேவையான அத்தனை மூலப்பொருட்களையும் தயாராக வைத்திருந்தனர். பெண்கள் பொங்கல் பானைகளுடன் மட்டும் வந்தனர். கூடலுார் பஸ்ஸ்டாண்ட் எதிர்புறம் ரோட்டோரம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் பொங்கல் வைத்து போராட்டம் நடத்தினர். கூடலுார் முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 4 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்