/* */

வருஷநாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் பல லட்சம் முறைகேடு

தேனி மாவட்டம், வருஷநாடு கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

HIGHLIGHTS

வருஷநாட்டில் 100 நாள் வேலை  திட்டத்தில் பல லட்சம் முறைகேடு
X
தேனி மாவட்டம் வருஷநாடு கிராம ஊராட்சியில் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள்.

தேனி மாவட்டம் வருஷநாடு கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், வருஷநாடு கிராம ஊராட்சியில் நுாறு நாள் வேலை உறுதி திட்டப்பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

இதில் முறைகேடுகளும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. வெளியூரில் வசிப்பவர்கள் பலர் நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்ததாக கூறி அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென ஒரு வருகைப்பதிவேடும் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்ளூரிலேயே வேலைக்கு வராத பலர் வேலைக்கு வந்ததாகவும் வருகை பதிவேட்டில் பதிவு செய்து முறைகேடு செய்துள்ளனர்.

அதேபோல் வேலை நடக்காத இடங்களிலும் வேலை நடந்ததாக கூறி, அந்த பணிகளை பல நுாறு பேர், பல நாட்கள் வேலை செய்ததாக கூறி பணம் எடுத்துள்ளனர்.

இப்படி பல லட்சம் ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து இங்குள்ள பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

விரிவான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 6 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...