/* */

மதுரை- ஆண்டிபட்டி இடையே வரும் ஏப்ரல் முதல் ரயில் இயக்கம்

மதுரை- ஆண்டிபட்டி இடையே வரும் ஏப்ரல் மாதம் முதல் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

மதுரை- ஆண்டிபட்டி இடையே வரும் ஏப்ரல் முதல் ரயில் இயக்கம்
X

பைல் படம்.

மதுரை- போடி இடையே 96 கி.மீ., துாரம் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது தேனி வரை பணிகள் முடிந்து விட்டாலும், ஆண்டிபட்டி- தேனி இடையே நடைபெற்ற அதிவே என்ஜின் சோதனை ஓட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திருப்தி தெரிவிக்கவில்லை.

இதனால் அவர் சில திருத்தங்களை செய்ய சொல்லி இருக்கிறார். மீண்டும் ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஆய்வு செய்த பின்னரே மதுரை- தேனி இடையே ரயில் இயக்க முடியும். தற்போது முதல் கட்டமாக ரயில் மதுரை- ஆண்டிபட்டி இடையே இயக்கப்பட உள்ளது. ஏப்ரல் முதல் இந்த ரயில் போக்குவரத்து தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

மதுரையில் தினமும் காலை 8.30 மணிக்கு புறப்படும் ரயில் 9.03க்கு உசிலம்பட்டிக்கும், 9.35க்கு ஆண்டிபட்டிக்கும் வந்து சேரும் என தெரிகிறது. மாலையில் ஆண்டிபட்டியில் மாலை 6.20க்கு புறப்பட்டு, 6.45 மணிக்கு உசிலம்பட்டிக்கும் 7.35 மணிக்கு மதுரைக்கும் சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 March 2022 3:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!