கம்பம் அருகே மகன் உயிரை பறித்த தந்தையின் மதுப்பழக்கம்

X
By - Thenivasi,Reporter |30 March 2022 8:30 AM IST
கம்பம் அருகே, தந்தையை மதுப்பழக்கத்தில் இருந்து மீட்க முடியாத துயரத்தில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள கம்பம் மெட்டு ரோட்டில் வசிப்பவர் சுல்த்தான் இப்ராஹிம். இவர் மதுவிற்கு அடிமையானவர். இவரது மகன் அப்துல்கபூர், 17. பிளஸ் 2 மாணவரான இவர், தந்தையிடம் மதுப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
எனினும், தந்தை கேட்கவில்லை. இதனால் மனம் உடைந்த அப்துல்கபூர், வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu