கூடலுார் ஒட்டான்குளம் கரை சேதம்: சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

சேதமடைந்த பாதையில் செல்ல முடியாமல் தவிக்கும் கூடலுார் விவசாயிகள். இடம் கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரை.
கூடலுார் ஒட்டான்குளம் கரையினை சீரமைக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கூடலுாரில் உள்ள ஒட்டான்குளம் கரை பல மாதங்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த கரையின் வழியாகவே விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு சென்று வர வேண்டும். விளை பொருட்களையும் கொண்டு வர வேண்டும். விவசாய பணிகளுக்கு தேவையான அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.
கரை சேதமடைந்துள்ளால் இந்த பாதையினை பயன்படுத்தும் விவசாயிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். விவசாய பணிகளே பாதிக்கப்படும் அளவு கரை சேதமடைந்துள்ளது.
எனவே கூடலுார் முல்லை சாரல் விவசாயிகள் இந்த கரையினை சீரமைக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தற்போது நாங்கள் என்.ஓ.சி., கொடுத்து விட்டோம். நீங்கள் பேரூராட்சி நிர்வாகத்தை சீரமைக்க சொல்லுங்கள் என தமிழக பொதுப்பணித்துறை கை விரித்துள்ளது. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு கரையினை சீரமைத்து தர வேண்டும். விவசாயிகளின் சிரமங்களை குறைக்க அவர்கள் உதவி செய்ய வேண்டும் என பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu