/* */

பேரூராட்சி அலுவலகம் வந்து செல்ல 80 கி.மீ. தொலைவுக்கு பயணிக்கும் மக்கள்

மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்ல 80 கி.மீ. பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது

HIGHLIGHTS

பேரூராட்சி அலுவலகம் வந்து செல்ல 80 கி.மீ. தொலைவுக்கு  பயணிக்கும் மக்கள்
X

சின்னமனுாரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ளது மேகமலை பேரூராட்சி. இந்த பேரூராட்சி எல்லைக்குள் மேகமலை கிராமம் மட்டுமின்றன, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ், வெண்ணியாறு, இரவங்கலாறு என்ற ஐந்து கிராமங்களும் பல சிறிய குடியிருப்புகளும் உள்ளன. இங்கு செயல்பட்டு வந்த பேரூராட்சி அலுவலகம் கடந்த கொரோனா காலகட்டத்தில் உத்தமபாளையத்திற்கு மாற்றப்பட்டது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரும், பேரூராட்சி அலுவலகம் மேகமலைக்கு மாற்றப்படவில்லை.

தற்போது மேகலையில் உள்ள பேரூராட்சி அலுவலகம் வெறும் கட்டடமாக மட்டுமே உள்ளது. அலுவலர்கள், பைல்கள் அனைத்தும் உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ளது. இதனால் இந்த கிராம மக்கள் தங்களது சொந்த பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்ல மட்டும் 80 கி.மீ., தாரம் பயணிக்க வேண்டும். இந்த சிக்கல் குறித்து மேகமலை பேரூராட்சி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், அதிகாரிகளும், அலுவலர்களும் தங்கள் சொந்த வசதிக்காக பேரூராட்சி அலுவலகத்தினை இன்னும் மேகமலைக்கு மாற்றாமல், உத்தமபாளையத்திலேயே செயல்படுத்தி வருகின்றனர்.

Updated On: 9 July 2022 11:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை