ஒரே அறையில் நாயுடன் சிறுத்தை சுதந்திரமா? உணவா? எது முக்கியம்

ஒரே அறையில் நாயுடன் சிறுத்தை சுதந்திரமா? உணவா? எது முக்கியம்
X

பாத்ரூமில் பனிரெண்டு மணி நேரம் சிக்கிக் கொண்ட சிறுத்தையும், நாயும்.

கர்நாடகாவில் உள்ள கொம்பாரு சரணாலயத்தை ஒட்டியுள்ள கழிவறையில் நடந்த நிகழ்வு இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒரு சிறுத்தை நாயை துரத்தியது. நாய் ஜன்னல் வழியாக கழிப்பறைக்குள் நுழைந்தவுடன் வெளியில் இருந்து மூடப்பட்டது. நாயின் பின்னால் நுழைந்த சிறுத்தையும் கழிவறைக்குள் சிக்கிக் கொண்டது.

சிறுத்தையை பார்த்ததும் நாய் பீதியடைந்து ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்தது. குரைக்கக்கூடத் துணியவில்லை.சிறுத்தை பசியால் நாயை துரத்தி வந்தாலும் நாயை தின்று, ஒரே பாய்ச்சலில் இரவு உணவு ஆக்கியிருக்கலாம்; ஆனால், செய்யவில்லை. இரண்டு விலங்குகளும் சுமார் 12 மணி நேரம் வெவ்வேறு மூலைகளில் ஒன்றாக இருந்தன. அமைதியாக இருந்தன.

வனத்துறையினர் சிறுத்தையைப் பிடித்து, ரிமோட் இன்ஜெக்ஷன் கன் (கால்நடை மயக்க மருந்து செலுத்தல்) மூலம் பிடித்தனர்.பசித்த சிறுத்தை ஏன் எளிதாக நாயை வேட்டையாடவில்லை? என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த பதில் அத்தனை பேரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வனவிலங்குகள் அதன் சுதந்திரத்தை மிகவும் உணர்திறன் கொண்டவை. அவைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பதை உணர்ந்தவுடன், அவைகள் தங்கள் பசியை மறக்கும் அளவுக்கு ஆழ்ந்த துக்கத்தை உணர முடியும். வயிற்றுக்கு உணவளிக்கும் அவைகளின் இயல்பான உந்துதல் மறையத் தொடங்குகிறது.

சுதந்திரம் என்ற கருத்தை இன்னும் விரிவாகப் பார்த்தால், அது மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.மேலும், இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டியது மிருகத்திற்கு கூட சுதந்திரம் அற்று அகப்பட்டு இருக்கும் அந்த நேரத்தில் பசியை மறக்கும் அளவிற்கு எண்ண ஓட்டம் இருக்கும் என்பதுதான். பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். ஆனா அதைவிட சுதந்திர முக்கியம் என்பது மிருகங்கள் காட்டின. அதுதான் உண்மையான சுதந்திரத்தின் உன்னதம். உணர்ந்து மனிதர்கள் நாம் பிறரின் சுதந்திரம் பாராட்டி சமூக நல்லிணக்கம் பேணுவோம்.

Tags

Next Story
ai as the future