/* */

தீக்காயம் அடைந்தாலும் 'இன்னுயிர் காப்போம்' திட்டம் கை கொடுக்கும்

தேனி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தீக்காயம் அடைந்தாலும் இன்னுயிர் காப்போம் திட்டம் கை கொடுக்கும்
X

தேனி மாவட்டத்தில்,  இன்னுயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்,  கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.

தேனி கலெக்டர் முரளீதரன் தலைமையில், தேனி மாவட்டத்தில், இன்னுயிர் காப்போம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக கருத்தரங்கு நடைபெற்றது. மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகாரிகள் பேசியதாவது: இந்த திட்டம் கடந்த 18ம் தேதி முதல், தேனி மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்து விட்டது. இதுவரை 25 பேர் இந்த திட்டத்தில் பயனடைந்துள்ளனர். காயமடைந்தவரின் விவரங்களை, மருத்துவர் பதிவேற்றம் செய்த சில நிமிடங்களில் பணம் அனுமதியாகி விடும். எனவே ரோடு விபத்தில் சிக்கியவர்களையும், வாகனம் தீ பிடித்து விபத்தில் சிக்கியவர்களையும், இதர தீ விபத்தில் சிக்கியவர்களையும் இந்த திட்டத்தில் சிகிச்சை அளித்து குணப்படுத்த அரசு கை கொடுக்கும்.

ஆனால் தற்கொலைக்கு முயன்றவர்கள், தற்கொலை செய்து கொள்ள விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, இந்த திட்டத்தில் காப்பாற்ற அரசு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் உதவி செய்யும். அதிகாரிகள் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

Updated On: 21 Dec 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு