/* */

முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாகி விடும்

முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று விவசாய சங்க நிர்வாகி கவலை தெரிவித்தார்.

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால்  ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாகி விடும்
X

ஐந்து மாவட்ட விவசாய சங்கங்களின் ஓருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசினை ஒரு போதும் நாங்கள் நம்பவே மாட்டோம். அணையினை பாதுகாக்கவும், உரிமைகளை மீட்கவும் எங்களின் வலுவான போராட்டங்கள் தொடர்ந்து நடக்கும். முல்லை பெரியாறு அணை நீரினை நம்பி தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கரில் பாசனம் நடக்கிறது. ஒரு கோடி விவசாயிகள் இந்த நீரினை நம்பி உள்ளனர்.

முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். கேரளா முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என கனவு கண்டு வருகிறது.

புதிய அணை கட்ட குறைந்தது 25 ஆண்டுகள் ஆகும். அதற்குள் தமிழகத்தில் இந்த ஐந்து மாவட்டங்களும் பாலைவனமாகி விடும். எனவே புதிய அணை கேரளாவின் கனவாகவே முடிந்து விடும். இவ்வாறு கூறியுள்ளாார்.

Updated On: 17 Nov 2021 4:10 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்