/* */

தேனியில் விநாயகர் சதுர்த்தி விழா பற்றி இந்து எழுச்சி முன்னணி ஆலோசனை

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை சிறப்பாக கொண்டாடுவது பற்றி இந்து எழுச்சி முன்னணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

தேனியில் விநாயகர் சதுர்த்தி விழா பற்றி இந்து எழுச்சி முன்னணி ஆலோசனை
X

தேனி இந்து எழுச்சி முன்னணி வாரவழிபாட்டு மன்ற கூட்ட அரங்கில் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி ஆலோசனை கூட்டம், வாரவழிபாட்டு கூட்டம் மாவட்ட தலைவர் ராமராஜ்ஜீ தலைமையில் தேனி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர பொருளாளர் ராஜேஷ்குமார்ஜீ, நிர்வாகிகள் ராமமூர்த்திஜீ, கோவிந்தராஜ்ஜீ உட்பட பலர் பங்கேற்றனர்.ஒவ்வொரு ஆண்டும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர்சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பெரும் இடையூறாக அமைந்தது.

இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் கொரோனாவிற்கு பிந்தைய சூழலில் வரும் விநாயகர்சதுர்த்தி விழாவை இதுவரை இல்லாத அளவு சிறப்பாக நடத்த வேண்டும். இதற்கென திட்டமிடவும், செயல்பாட்டு முறைகளை வகுக்கவும் வரும் 24ம் தேதி இந்து எழுச்சி முன்னணியின் ஆலோசனைக்கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும், மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகளை வரவழைக்கவும் முறையான ஏற்பாடுகளை செய்ய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 11 July 2022 9:35 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்