/* */

தொடர் விடுமுறையால் வனத்துறைக்கு தலைவலி

தொடர் விடுமுறையால் தேனி மாவட்ட வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

தொடர் விடுமுறையால் வனத்துறைக்கு தலைவலி
X

பைல் படம்.

தேனி மாவட்டம் முழுக்க, முழுக்க மலைகளாலும், அடர்ந்த வனங்களாலும் சூழப்பட்ட மாவட்டம். தவிர இங்கு அணைகள், நீர் வீழ்ச்சிகள், அருவிகள், ஆறுகள் என அதிகம் உண்டு. இத்தனை இருந்தாலும், மக்கள் வனத்திற்குள் சென்று பொழுது போக்குவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். காரணம் மாவட்டத்தின் எந்த கிராமத்தில் இருந்தாலும் சில கி.மீ., பயணித்தால் வனத்திற்குள் சென்று விடலாம். சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வன நிலங்கள் தேனி மாவட்டத்தை சூழ்ந்துள்ளது.

இதற்குள் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தவிர வனத்திற்குள் நீரோடைகள், சமநிலங்கள் என பல மாறுபட்ட அமைதியான, அருமையான சுற்றுச்சூழல் உள்ளது. தேனி மாவட்ட மக்களில் பலர், விடுமுறை என்றால் வனத்திற்குள் சென்று பொழுதுபோக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மக்கள் தானே குறிப்பிட்ட எல்லை வரை வந்து செல்லட்டும் என வனத்துறை மனிதாபிமான முறையில் அனுமதிக்கவும் முடியாது.

இருப்பினும் சில நேரங்களில் கண்டுகொள்ளாமல் இருந்தால், அந்த வாய்ப்பை வன வேட்டைக்காரர்கள் தவறாக பயன்படுத்தி வனத்திற்குள் புகுந்து வேட்டையாடுகின்றனர். இதனால் எதற்கு பிரச்னை என கருதி, தொடர் விடுமுறை வந்தால், ஒட்டுமொத்த வனத்துறையும் ரோந்து பணிகளில் இறங்கி விடுகின்றனர். தற்போது ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், வனக்குற்றங்களை தவிர்க்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 16 Jan 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது