/* */

ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி

ஆண்டிபட்டியில் டூ வீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஆண்டிபட்டியில்  டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து:  விவசாயி பலி
X

பைல் படம்.

தேனி மாவட்டம், உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனுாரை சேர்ந்தவர் பாண்டியராஜன், 56. விவசாயான இவர் தனது தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்திருந்தார். பறித்த வெண்டைக்காய்களை ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுாரில் உள்ள வெண்டைக்காய் ஏற்றுமதி கம்பெனிக்கு அனுப்பி வைத்தார். தானும் தனது டூ வீலரில் தொட்டப்பநாயக்கனுாரில் இருந்து திம்மரசநாயக்கனுாருக்கு சென்று கொண்டிருந்தார்.

மதுரை ரோட்டில் அமராவதி பண்ணை அருகே இவர் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாண்டியராஜன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் அரசு பஸ் டிரைவர் பால்முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 2 July 2022 2:07 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்