போடி அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கொன்ற கொடூரர்கள் கைது

போடி அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை  கொன்ற கொடூரர்கள் கைது
X
போடியில் ஆடுகளை கொலை செய்து மேய்க்க வந்தவர்களை காயப்படுத்திய மூன்று கொடூரர்களை போலீசார் கைது செய்தனர்.

போடி சங்கராபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், 26. ஜெயராம், 25, முத்துவேல், 40, முருகேஸ்வரன், 40. இவர்கள் தனியார் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வருகின்றனர். போடி புதுாரை சேர்ந்த முருகன், 50, பிச்சைமணி, 34, ரவிராஜா, 29 ஆகியோர், 'நாங்கள் ஆடு மேய்க்கும் இடத்தில் நீங்கள் எப்படி ஆடுகளை மேய்க்கலாம்' எனக்கூறி இந்த நான்கு பேரையும் அடித்தும், அரிவாளால் வெட்டியும் காயப்படுத்தினர்.

இவர்கள் மேய்த்த இரண்டு ஆடுகளையும் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, 'மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கொன்ற கொடூரர்கள் முருகன், பிச்சைமணி, ரவிராஜாவை கைது செய்தனர்.

Tags

Next Story
ai marketing future