வருஷநாட்டில் நான்கு கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

வருஷநாட்டில் நான்கு கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
X
பைல் படம்.
வருஷநாடு பகுதியில் 4 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், வருஷநாடு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் 75 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி, நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு எஸ்.ஐ., அருண்பாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது பண்டாரஊத்து வண்ணான்துறை ஓடையில் அருகில் வருஷநாட்டை சேர்ந்த செல்வம், 44, கோம்பை தொழுவை சேர்ந்த ஆண்டவர், 56 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நான்கு கிலோ கஞ்சாவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future