/* */

மேகமலை வனப்பகுதியில் குறைந்துபோன மழைப்பொழிவு

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் எதிர்பார்த்த அளவு மழை பொழிவு கிடைக்க வில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

HIGHLIGHTS

மேகமலை வனப்பகுதியில் குறைந்துபோன  மழைப்பொழிவு
X

மேகமலையில் உள்ள மணலாறு நீர் தேக்கம் நீர் நிரம்பிய நிலையில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் எதிர்பார்த்த அளவு மழை பொழிவு கிடைக்க வில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் வளம் மிகுந்த வனப்பகுதியாக மேகமலை இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே இங்கு மழையளவு அதிகமாக இருந்தது. இந்த ஆண்டும் பரவலாக மழை கிடைத்தது. இப்போது மழை குறைந்துவ விட்டது. சாதாரண நாட்கள் போன்று லேசான சாரல் மட்டுமே பெய்து வருகிறது. மேகமலையில் உள்ள. ைஹவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, துாவானம், வெண்ணியாறு நீர் தேக்கங்கள் நிறைந்து விட்டன.. எல்லா நீர் தேங்கங்களிலும் முழுமையாக நீர் நிறைந்துளளது.

மிகவும் சிறிய பேபி டேம் கூட முழுமையாக நிறைந்துள்ளது. சுருளி அருவியில் வனத்தில் மற்ற பகுதியில் பெய்த மழை நீர் வெள்ளமாக வந்தது. சின்னசுருளியிலும் முன்பு தண்ணீர் வந்தது. தற்போது இரண்டு அருவிகளிலும் பெரிய அளவில் வெள்ளம் வரவில்லை.

மேகமலை வனத்தில் தினமும் மாலை 3 மணிக்கு மேல் லேசான சாரல் தொடங்குகிறது. இரவெல்லாம் சாரல் மட்டுமே பெய்கிறது. காலை முதல் பிற்பகல் 3 மணி வரை மழை கிடைப்பதில்லை. இன்னும் ஓரிரு நாளில் நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். வைகையிலும் நீர் வரத்து சுமாராகவே இருந்து வருகிறது.. இவ்வாறு கூறினர்.



Updated On: 17 Dec 2023 9:22 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  4. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  6. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  8. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  9. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்