/* */

லஞ்சம் வாங்கிய முன்னாள் பஞ்சாயத்து தலைவிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

Bribery Case - லஞ்சம் வாங்கிய முன்னாள் பஞ்சாயத்து தலைவிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

Bribery Case | Theni News
X

Bribery Case - தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா பொட்டிப்புரம் கிராம ஊராட்சி தலைவராக இருந்தவர் சந்திரா. இந்த கிராமத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த செல்வராஜ் (வயது 53 )என்பவர் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். குடிநீர் இணைப்பு வழங்க சந்திரா 3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கேட்டார்.செல்வராஜ் இது குறித்து தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் செல்வராஜிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார்.

இந்த பணத்தை லஞ்சமாக வாங்கிய ஊராட்சி தலைவி சந்திராவை 2012 செப்டம்பர் 6ம் தேதி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி கோபிநாதன் முன்னாள் ஊராட்சி தலைவியான சந்திராவிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 July 2022 4:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்