தேவதானப்பட்டி அருகே கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்த மர்ம கும்பல்
X
தேவதானப்பட்டி அருகே மர்ம கும்பல் தீ வைத்ததில் பற்றி எரியும் கரும்பு தோட்டம்.
By - Thenivasi,Reporter |22 March 2022 4:15 PM IST
பொம்மிநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவரது கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராம ஊராட்சி தலைவராக இருந்தவர் அப்பாஸ். இவருக்கு இங்கு ஆறு ஏக்கர் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இன்று மர்ம கும்பல் தீ வைத்து விட்டது. தீ மளமளவென பற்றி எரிந்த நிலையில், பக்கத்து தோட்டத்து விவசாயிகளும், பொதுமக்களும் தேவதானப்பட்டி தீயணைப்பு படையினரும் வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தீ வைத்த கும்பல் பற்றி தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu