/* */

மாற்றுத்திட்டம் மூலம் மதுரைக்கு குடிநீர்: மேயரிடம் விவசாயிகள் முறையீடு

லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக்கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

மாற்றுத்திட்டம் மூலம் மதுரைக்கு குடிநீர்: மேயரிடம் விவசாயிகள் முறையீடு
X

கூடலுார் வந்த மதுரை மேயர் இந்துராணியிடம், லோயர்கேம்ப்பில் இருந்து மாற்றுத்திட்டங்களின் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி, மனு கொடுத்த விவசாயிகள்.

தேனி மாவட்டம், குமுளி அருகே லோயர்கேம்ப்பில், முல்லை பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த 1300 கோடி ரூபாய் அரசு ஒதுக்கி உள்ளது. குழாய் மூலம் குடிநீர் கொண்டு சென்றால் தேனி மாவட்டம் பாலைவனமாகி விடும். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. மாற்றுத்திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரைமேயர் இந்திராணி தனது உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க கூடலுார் வந்தார். அவரை முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், செயலாளர் ஜெகன், பொருளாளர் ஜெயபால், துணைத்தலைவர் ராஜா, துணைச் செயலாளர் ரவி, பாரதீயகிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு உட்பட விவசாயிகள் சந்தித்து, லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை மாற்று வழிகளின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

Updated On: 14 March 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்