/* */

தேனியில் விஷம் குடித்து விட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இளைஞரால் பரபரப்பு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த விசாரணைக்கு விஷம் குடித்து விட்டு வந்து மயங்கி விழுந்த இளைஞரை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

HIGHLIGHTS

தேனியில் விஷம் குடித்து விட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இளைஞரால் பரபரப்பு
X

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த இளைஞர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தாமரைக்குளம் நியூ காலனியை சேர்ந்தவர் ராஜா, 32. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வாழவைக்க வேண்டும் என்று சமூக நலத்துறையில் ராஜா மனு கொடுத்தார். அந்த மனு மீது விசாரணை நடத்த இன்று வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். விசாரணைக்கு வந்த ராஜா திடீரென கலெக்டர் அலுவலக வாயிலில் மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி செய்து விசாரித்த போது அரளி விதையை அரைத்து குடித்து விட்டு தான் விசாரணைக்கு வந்ததாக தெரிவித்தார்.

உடனடியாக அவரை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 April 2022 1:02 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...