Begin typing your search above and press return to search.
தேனியில் விஷம் குடித்து விட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இளைஞரால் பரபரப்பு
தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த விசாரணைக்கு விஷம் குடித்து விட்டு வந்து மயங்கி விழுந்த இளைஞரை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.
HIGHLIGHTS
தேனி மாவட்டம், பெரியகுளம் தாமரைக்குளம் நியூ காலனியை சேர்ந்தவர் ராஜா, 32. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வாழவைக்க வேண்டும் என்று சமூக நலத்துறையில் ராஜா மனு கொடுத்தார். அந்த மனு மீது விசாரணை நடத்த இன்று வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். விசாரணைக்கு வந்த ராஜா திடீரென கலெக்டர் அலுவலக வாயிலில் மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி செய்து விசாரித்த போது அரளி விதையை அரைத்து குடித்து விட்டு தான் விசாரணைக்கு வந்ததாக தெரிவித்தார்.
உடனடியாக அவரை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.