/* */

போடி மெட்டு அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டுயானை

போடி மெட்டு அருகே காட்டு யானை தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

HIGHLIGHTS

போடி மெட்டு அருகே குடியிருப்புகளுக்குள்  புகுந்த காட்டுயானை
X

போடி மெட்டு அருகே தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானை.

தேனி மாவட்டம், கேரள எல்லையில் உள்ள போடி மெட்டில் இருந்து 6 கி.மீ., தொலைவில் கேரளாவிற்குள் அமைந்துள்ளது தோண்டிமலை கிராமம். இங்கு பெரும்பாலும் தமிழர்களே வசிக்கின்றனர். இங்கு ஏலத்தோட்டங்களும், தேயிலை தோட்டங்களும் அதிகம். அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் இங்கு யானைகளும் அதிகம்.

இப்பகுதியில் தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானை, குடியிருப்பு பகுதிகளுக்கும் உலா வந்தது. ரோட்டில் நீண்ட நேரம் நின்றிருந்தது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஒற்றை யானை என்பதால் சற்று ஆக்ரோசம் காட்டும் என யாரும் அருகில் செல்லவில்லை.

வனத்துறையினர் வந்து சாதுர்யமாக யானையின் நடைபாதையை திசை திருப்பி, வனத்திற்குள் அனுப்பி வைத்தனர். சில மணி நேரம் சுற்றித்திரிந்த யானை தோட்டங்களையோ, குடியிருப்புகளையோ சேதப்படுத்தவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 30 Dec 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...