கூடலூர் அருகே ஏற்பட்ட குழாய் உடைப்பினால் குடிநீர் விநியோகம் பாதிப்பு
X
பைல் படம்.
By - Thenivasi,Reporter |26 April 2022 4:48 PM IST
கூடலுார் அருகே குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
குமுளி மலையின் அடிவாரத்தில் உள்ள லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கூடலுார், கம்பம், உத்தமபாளையம், தேவாரம், பண்ணைப்புரம், காமயகவுண்டன்பட்டி உட்பட பல ஊர்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த குடிநீர் குழாய் கூடலுார் அருகே குறுவனத்துப்பாலத்தை ஒட்டி வருகிறது.
இந்த பாலத்தில் நேற்று சேதம் ஏற்பட்டு குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் இந்த குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குடிநீர் விநியோகிக்கும் அத்தனை கிராம, நகரப்பகுதிகளும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. இந்த குழாய் உடைப்பை சரி செய்ய ஒரு வாரத்திற்கு மேல் ஆகும். அதுவரை குடிநீர் குழாய் உடைப்பை சீரமைப்பது மிகவும் சிக்கலான விஷயம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu