/* */

கூடலுாரில் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்

தேனி மாவட்டம் கூடலுார் நகராட்சியில் குடிநீர் குழாய் உடைந்து அதில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் என பொதுமக்கள் அச்சம்

HIGHLIGHTS

கூடலுாரில் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்:  தொற்று நோய் பரவும் அபாயம்
X

கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே குடிநீர் சாக்கடைக்குள் செல்லும் குடிநீர் குழாய்க்குள் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்து வருகிறது.

தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சியில் வடக்கு காவல் நிலையத்தை ஒட்டி உள்ள பகுதியில் செல்லும் குடிநீர் குழாய், கழிவுநீர் கால்வாயை கடந்து செல்கிறது. இந்த இடத்தில் குடிநீர் குழாய் கழிவுநீர் கால்வாய்க்குள் புதைந்து, குழாயும் உடைந்துள்ளது.இதனால் கழிவுநீர், குடிநீர் குழாய்க்குள் புகுந்து விடுகிறது.

இதே போன்று நகராட்சியில் பல இடங்களில் குடிநீர் குழாய்க்குள் கழிவுநீர் செல்கிறது. இதனால் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் தரமற்றதாகவும், குடிக்க லாயக்கற்றதாகவும், துர்நாற்றத்துடனும் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குடிநீர் குழாய் உடைந்துள்ள பகுதிகளை நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து உடைப்புகளை அடைத்து, கழிவுநீர் கலப்பதை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 29 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?