/* */

முல்லை பெரியாறு அணையில் நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவை விட, தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதாலும், அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதாலும் நீர்மட்டம் உயரும் வாய்ப்புகள் குறைந்துள்ளது.

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணை நீர் மட்டம் 10 அடி வரை உயர்ந்து 138 அடியை எட்டியது. அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர் வரத்து படிப்படியாக குறைந்து இன்று காலை விநாடிக்கு 2131 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.

அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 2300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அணை நீர் மட்டம் உயரும் வாய்ப்புகள் குறைந்துள்ளது. தற்போதைய நிலையில் அணைநீர் மட்டம் 137.60 அடியாக உள்ளது. இனிமேல் பலத்த மழை பெய்தால் மட்டுமே நீர் மட்டம் உயரும் வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 27 Oct 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...