/* */

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்

சுருளிப்பட்டி கிராம ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி கவுன்சிலர்கள் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்
X

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய கவுன்சிலர்கள்.

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியம் சுருளிப்பட்டி கிராம ஊராட்சி தலைவராக இருப்பவர் நாகமணி வெங்கடேசன். துணைத்தலைவராக ஜெயந்திமாலா மாயாண்டி உள்ளனர்.

ஊராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு அதிகமாக இருப்பதாகக் கூறி, கடந்த ஆறு மாதங்களாக வார்டு உறுப்பினர்கள் அனைவரும் புகார் எழுப்பி வந்தனர். தங்கள் கிராமத்திற்கு ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடமும் புகார் கூறினர்.

இந்நிலையில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பி.டி.ஓ.,க்கள் கோதண்டபாணி, ஜெயகாந்தன், கம்பம் தெற்கு போலீஸ் எஸ்.ஐ., ஜெயக்குமார் ஆகியோர் முற்றுகையிட்ட வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையினை கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தனர்.

பின்னர், மூன்று மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தை வார்டு உறுப்பினர்கள் விலக்கிக் கொண்டனர்.

Updated On: 3 Aug 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !