/* */

நெற்பயிரை காப்பீடு செய்யலாம்: தேனி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தேனி மாவட்ட விவசாயிகள் தங்களது நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் முரளீதரன் அறிவுறுத்தியுள்ளார்

HIGHLIGHTS

நெற்பயிரை காப்பீடு செய்யலாம்: தேனி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
X

நடவு பணிகள் முடிந்த வயல்களில் களைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள். இடம்: கம்பம் பள்ளத்தாக்கு.

தேனி மாவட்ட விவசாயிகள் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் தங்களது நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் முரளீதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவல்: தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. முதல் போக அறுவடை பணிகளும் நடக்கிறது. தேனி மாவட்டத்தில் இப்கோ-டோக்கியோ என்ற நிறுவனம் பயிர்காப்பீடு வசதிகளை வழங்குகிறது. விவசாயிகள் ஒரு ஏக்கர் நெல் பயிரை 488 ரூபாய் 25 பைசா காப்பீடு செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம். இழப்பீடு ஏற்பட்டால் முழு காப்பீடு தொகையும் விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தில் முதல் பக்க நகல் இவற்றை கொடுத்து பதிவு செய்து, காப்பீடு தொகைக்கான பிரிமீயத்தை கட்டி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் இந்த பணிகளை விவசாயிகள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 10 Nov 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...