/* */

மதகுகள் மூலம் மதுரைக்கு குடிநீர் திட்டம்: கூடலுார் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

லோயர் கேம்ப்பில் இருந்து மதகுகள் மூலம் மதுரைக்கு குடிநீர் செல்லும் திட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

மதகுகள் மூலம் மதுரைக்கு குடிநீர் திட்டம்:  கூடலுார் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X
லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு மதகுகள் வழியாக குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முல்லை பெரியாற்றில் லோயர்கேம்ப்பில் இருந்து மதகுகள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், முல்லை பெரியாற்றில் லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு மதகுகள் வழியாக குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு 1150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மதகுகள் வழியே தண்ணீர் கொண்டு சென்றால், வழியோர கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு இல்லாமல் போய் விடும். எனவே தற்போதைய திட்டப்படி தண்ணீரை ஆறு வழியாகவே கொண்டு சென்று, வைகை அணையில் இருந்து மதகுகள் வழியாக கொண்டு செல்லலாம். நிலத்தடி நீர் மட்டத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை மாற்றி செயல்படுத்த வலியுறுத்தி, கூடலுார் முல்லை சாரல் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் லோயர்கேம்ப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On: 2 Oct 2021 4:45 AM GMT

Related News