/* */

நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு

நவ.1ம் தேதிகேரள வழக்கறிஞர்களை கண்டித்து, 5 மாவட்ட விவசாயிகள் கேரள எல்லையை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
X

முல்லைப்பெரியாறு ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

முல்லை பெரியாறு அணைக்கு எதிராக பேசி வரும் கேரள வக்கீலை கைது செய்யாவிட்டால், நவ.,1ம் தேதி கேரள எல்லையை முற்றுகையிடுவோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஓருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், முல்லை பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது. கேரள வக்கீல் ரசல்ஜோய் அணைக்கு எதிராக பேசி வருகிறார். இரு மாநிலங்களுக்கு இடையே பகையை துாண்டி வருகிறார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அணை பாதுகாப்புக்கு எதிராக பேசுவதை நிறுத்த சொல்ல வேண்டும்.

இல்லையெனில் நவ., 1ம் தேதி குமுளியில் கேரள எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். கடந்த 1956ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து பிரித்து கொடுத்த 1400 சதுர கி.மீ., மலைப்பரப்பினை மீண்டும் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

Updated On: 26 Oct 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...