/* */

கம்பம் அருகே வீட்டு மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

கம்பம் அருகே ராயப்பன்பட்டியில் வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான்.

HIGHLIGHTS

கம்பம் அருகே வீட்டு மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
X

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு செய்திக்கான மாதிரி படம் 

கம்பம் அருகே புதுப்பட்டியை சேர்ந்த மெக்கானிக் அருண்குமார் மகன் கமலக்கண்ணன்(9). தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த இவர், வீட்டில் மாடியில் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்தார். தந்தை வேலைக்கு சென்று விட்டார். தாய் வெளியே சென்றிருந்தார். அப்போது மாடி வீட்டில் இருந்த மின் இணைப்பில் தெரியாமல் தொட்டு விட்டார்.

கமலக்கண்ணன் உடலில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கமலக்கண்ணனை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கமலக்கண்ணன் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அருண்குமார் கொடுத்த புகாரில் உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 July 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!