/* */

மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: கூடலுார் நகராட்சி நிர்வாகம் ஆலோசனை

கொட்டப்படிருப்பது மருத்துவமனை கழிவுகள் என்பதால் மருத்துவமனை நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்

HIGHLIGHTS

மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: கூடலுார் நகராட்சி நிர்வாகம் ஆலோசனை
X

மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க இறைச்சிக்கடைக்காரர்களுடன் ஆலோசனை நடத்திய கூடலுார் நகராட்சி அதிகாரிகள்

கூடலுார் ஒட்டான்குளம் கரையில் மருத்துவக் கழிவுகளை கொட்டக்கூடாது என இறைச்சிக்கடைக்காரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது

கூடலுார் ஒட்டான்குளம் கடையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவக்கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டிருந்தன. கண்மாய் கரையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதற்கு விவசாயிகள் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, கூடலுார் நகராட்சி நிர்வாகம் கூடலுார் ஆடு, கோழி இறைச்சி கடைக்காரர்களை அழைத்து பேசினர். அப்போது, தாங்கள் ஆடு, கோழி இறைச்சி கழிவுகளை கண்மாய், குளக்கரைகளில் கொட்டுவதில்லை. அதனை மறுசுழற்சி மூலம் உரமாகவும், தீவனமாகவும் மாற்றும் தொழில்நுட்பத்தை கடைபிடித்து வருகிறோம். கண்மாய் கரையில் மட்டுமல்ல, நகராட்சியில் எங்காவது ஒரிடத்தில் ஆடு, கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டிருந்தால் தங்கள் மீது அபராதம் விதிக்கலாம் என விளக்கமளித்தனர். மேலும், கண்மாய்க்கரையில் கொட்டப்பட்டிருப்பது மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள். ஆகவே, மருத்துவமனை நிர்வாகிகளை அழைத்து பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் என அதிகாரிகளின் அறிவுறுத்தினர்.

Updated On: 15 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் அருகே காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி படுகாயம்