தேனி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

தேனி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி தேனி எஸ்.பி. அலுவலகத்தில் நடந்தது.
திண்டுக்கல் டி.ஐ.ஜி., விஜயகுமாரி தலைமை வகித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். போலீஸ் எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கினை சிறப்பாக கையாண்ட இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், குற்றவாளிகளை கைது செய்ய இன்ஸ்பெக்டர் லாவண்யா, மதுரையில் குழந்தை விற்பனை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளிகள் கேரளாவிற்கு தப்ப முயன்ற போது மடக்கி பிடித்த போடி போலீஸ்காரர் சரவணன், எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் நாகராஜ், பெரியகுளத்தில் விற்பனை செய்ய வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த டி.எஸ்.பி.,முத்துக்குமார் உட்பட பல்வேறு போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu